ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு


ந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது.

உலகிலேயே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளை புரிந்திருந்தாலும் சமீப காலமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தன.

இந்தச் சூழலில், சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.சி.ச.ஐ.,க்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சச்சின் தெண்டுல்கர் ஓய்வு அறிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்துள்ளார்.  இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும்.

ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை அவரையே சேரும். 62 முறை ஆட்டநாயகன் விருதும், 15 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

சிசேரியன் பெயர் விளக்கம்


*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.


*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல - கமல்

அன்பே சிவமும் கடவுள் நம்பிக்கையும்

திருமண மண்டபத்தில் கமலை பார்த்த நாசர் இழுத்து செல்வார்.

அப்போது கமல்

"நீங்க என்னைக்காவது க்யூல நின்னு சாமி கும்புட்டுருக்கீங்களா?
இருக்குற க்யூவல்லாம் நிக்க வசிட்டு தனியா பர்சனல் தரிசனம் பன்றவராச்சே நீங்க.
செய்யற தப்பெல்லாம் பன்னிபுட்டு உண்டியல்ல காச போட்டுருவீங்க. உங்க பாவத்தை எல்லாம் மன்னிச்சி கடவுள் காப்பாத்துவாரு இல்ல.
அப்புடி காப்பாத்துற கடவுள் கடவுளே இல்ல கூலி. ஏண்ணா அவரும் காசு வாங்கிட்டு தான வேல செய்யுறாரு"

என்பார். என்ன ஒரு அருமையான விளக்கம்.

.......

இறுதியில் சந்தானபாரதி அரிவாளுடன் கமலை கொலை செய்ய வந்து மனதை மாற்றி கொள்ளும் போது,

"எனக்கு கடவுள் நம்ம்பிக்கை இருக்கு தம்பி. உங்களூக்கு எப்புடியோ?" என்பார்.

அதற்கு கமல் "எனக்கும் இருக்கு" என்பார்.

"யார் அந்த கடவுள்?" என்றதும் சந்தான பாரதியை காட்டி "ஒருத்தர கொலை பன்ன வந்துட்டு மனச மாத்ஹ்டி கிட்டு மன்னிப்பு கேக்குற மனசு இருக்கு பாருங்க அதுதான் கடவுள்" என்பார்.

"மனச மாத்திக் கிட்டேன் அதுக்காக நான் கடவுள்லாம் இல்ல தம்பி" என்பார்.

"அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல" என்பார்.

"அன்பே சிவம்"

பகத்சிங்கின் கடைசி கடிதத்தில் இருந்து


மனித குலத்திற்க்கு நான் செய்யவேண்டி சில குறிக்கோள்களை நான் பேணிவளர்த்தேன். அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்குண்டான வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்ற எண்ணம் எப்போதேனும் என் மனதில் உண்டாகுமானால் அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்

- 1931 மர்ச் 22. பகத்சிங்கின் கடைசி கடிதத்தில் இருந்து.

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!


மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! face book- இல் இருந்து ...

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.
ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.
லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைஅறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தைபடித்துக்கொண்டி ருந்ததால், நான்ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்!

'தல' அஜித் குமார் பேஸ்புக் கவர் /அட்டை படம்

ஹாய் தல ரசிகர்களே , இதோ 'தல' இன் பேஸ்புக் கவர் படம். Right click --> save --> enjoy.








வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?

ன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய திருவிழாக்களிலும், திருமண வீடுகள், சடங்கு வீடுகள் மற்றும் எல்லா விழாக்களிலும் சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது. என்னே பரிதாபம்?!) அவ்விடங்களில் எல்லாம் வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூடு எவ்வளவு அசுத்தமும் கிருமிகளும் நிறைந்ததாகக் கூட இருக்கும். ஆனால் பாருங்கள். அவ்விதமாய் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி வந்து அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய அதன் மருத்துவத் தன்மைதான்.

ஆகவே மக்களே! இனியாவது தட்டுகளுக்கு பதில் கூடுமானவரை வாழை இலையைப் பயன்படுத்துங்கள். வியாதியின்றி வாழுங்கள்!

ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரண மடைகிறான்.


நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். மற்ற பழக்கங்களை விடுகிறது போல இப்பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிகிறதில்லை. பலர் இப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்கள். ஆனால் முடிவதில்லை. ஜெயிக்கிற சதவீதத்தை விட தோற்கிற சதவீதமே மிக அதிகம்.

ஏன் பலர் இதில் தோல்வியடைகிறார்கள்?
மனஉறுதி இல்லாதது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை இல்லை. நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சிகரெட்டுக்கு அடிமையானவர்கள் அதன் பிடியிலிருந்து மீள்வதென்பது எமனின் பிடியிலிருந்து மீள்வதுதான்.

நம்முடைய மூளையில் நிறைய நுண்ணிய உணர்கடத்திகள் (Receptors) உள்ளன. அவற்றில் சில வகைதான் இந்த நிகோடின் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ளன. நீங்கள் புகை பிடிக்கும்போது சிகரெட்டின் நிகோடின் ஆனது இந்த உணர்கடத்திகளிடம்தான் முதலில் செல்கிறது. பின்னர் இந்த உணர்கடத்திகள் நமது மூளையின் மற்றொரு பகுதியான டோபாமின் (Dapomine) என்ற உணர்கடத்திகளுக்கு இந்த நிகோடினை அனுப்புகிறது. இந்த டோபாமின்கள் தான் நமக்கு சந்தோஷத்தை தருகிற உணர்கடத்திகளாகும். ஆனால் இந்த டோபாமின்கள் இந்த நிகோடினால் உண்டாகும் சந்தோஷத்தை வெகுநேரம் தன்னிடம் வைத்திருக்காமல் துப்பி விடுகிறது. மேலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அந்த சந்தோஷத்திற்காக ஏங்கத் துவங்கி விடுவதால் நமக்கு மீண்டும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய உணர்கடத்திகளை (Verenicline) செயற்கையாக உற்பத்தி செய்ய தீவிரமான ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வெரனிக்ளின்கள் மார்க்கட்டுக்கு வந்துவிட்டால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான். ஏனென்றால் அதன்பிறகு சிகரெட் விடுவதை எளிதில் நிறுத்திவிட முடியும். இவை டோபாமின்களின் சந்தோஷ உணர்வுகளின் உற்பத்தியை தடுத்துவிடக் கூடிய திறன் பெற்றவை. ஆகையினால் நீங்கள் சிகரெட் பிடித்தாலும் அதன் மூலம் திருப்தி கிடைக்காது. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இவற்றைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவீர்கள். (வேண்டாத பொண்டாட்டி கூட எத்தனை நாள் சார் வாழ முடியும்?). அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.

சரி. இப்போது சிகரெட்டைக் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை பார்க்கலாம்.

1. ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரண மடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம் (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டுபிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல)

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)

சரிங்க. சிகரெட்டை பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிவிட்டேன். இதைப் படிச்ச நீங்க மனஉறுதியோட இந்த பழக்கத்தை விட்டுட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். செய்வீங்களா?

உங்களுக்கு கூகிளின் ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா?

கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம் 100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக (Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27 ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள் அறிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இங்கே.

• முதலில் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தவுடனே மேல்பகுதியில் Finalized Earnings என்பதில் இந்த மாதம் செக் போடப்பட்டு விட்ட்தா என உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். போடப்பட்டிருந்தால் Most Recent Payment என்றும் கீழே தேதியும் இருக்கும். மேலே சொன்ன மாதிரி பெரும்பாலும் 24 – 27 ந்தேதிக்குள்தான் செக் போடப்படும்.

• அடுத்து Finalized Earnings->Details என்பதைக் கிளிக் செய்யவும். இல்லை இட்துபுறத்தில் Payments என்பது வழியாகவும் செல்ல்லாம். அதில் உங்களுக்கு இதுவரை அனுப்பிய ஆட்சென்ஸ் காசோலைகளின் விவரம் இருக்கும். அதில் கடைசியாகப் பார்த்தால் Payment Issued என்றிருக்கும். அதனருகே Details என்பதைக் கிளிக் செய்தால் அனுப்பப் பட்ட செக்கின் விவரங்கள் இருக்கும்.

• உங்கள் பணம் டாலரில் மற்றும் ருபாயில் Payment Type, Date மற்றும் Payment Number போன்ற விவரங்கள் குறிப்பிட்டிருப்பார்கள்.இந்த Payment Number ஐ காப்பி செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

• அட்சென்ஸ் செக் இந்தியாவில் ஹைதராபாத் தலைமையகத்திற்கு வந்து சேர தோராயமாக 10-15 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு DHL/Bluedart கொரியர் மூலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சாதாரண தபால் மூலம் வழங்கப் படும்.

• நீங்கள் நகர்ப்புறத்தில் வசிப்பவராயின் Bluedart இணையதளத்தில் சென்று Track your Shipment பகுதியில் Ref No வட்டத்தைக் கிளிக் செய்யவும். பின்னர் அந்த கட்டத்தில் உங்களின் Payment Number இல் பூஜ்யத்தை எடுத்துவிட்டுஅடித்தால் அவர்கள் உங்கள் செக்கை எடுத்துக் கொண்ட விவரங்கள் கிடைக்கும். அதில் Pickup date, From, To, Status, Date of Delivery போன்றவை இருக்கும்.





• உங்கள் செக் வந்து கொண்டிருந்தால் Status – In Transit என்றும் வந்து சேரும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் WayBill No என்று ஒரு எண் இருக்கும்,அதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் இன்னும் ஹைதராபாத்தில் செக் எடுக்காவிடில் எந்த விவரமும் வராது. அதனால் செக்வரப்போகும் மாதத்தின் 4ம் தேதி முதல் 12 ந்தேதிக்குள் வரை தினமும் இதனை ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

• Bluedart தளத்தில் செக் எடுக்கப்பட்டிருந்தால் Email Alert வசதியிருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும் மற்றும் உங்கள் Waybill Status இல் எப்போது யாரிடம் கொடுத்தார்கள் என்று அப்டேட் செய்து விடுவார்கள்.

• சரி வீட்டிற்கு வரும் போது யாரும் வீட்டில் இல்லை அல்லது அவர்களால் உங்கள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலையை நமது WayBill Status இல் ஏற்றிவிடுவார்கள்.

• சில நேரம் அவர்கள் மறுபடியும் அடுத்த நாள் வந்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை நாள் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் தவறவிட்டு விட்டால் தயங்காமல் உடனடியாகBluedart இணையதளத்தில் Contact பகுதிக்குச் சென்று உங்கள் ஊரின் Customer Care எண்ணைக் கண்டறிந்து உங்கள் WayBill Number ஐச் சொல்லுங்கள். உங்கள் செக்கினை மறுபடியும் கொண்டுவருவதாகச் சொன்னால் சந்தோசப்படுங்கள். இல்லையெனில் நீங்களே எதேனும் உங்கள் பெயருள்ள அடையாள அட்டையை எடுத்துச் சென்று வாங்கிவிடுங்கள்.

• நீங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயின் உங்கள் பகுதியில் DHL/Bluedart வராமல் இருந்தாலும் உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் சாதாரண தபாலில் தான் வரும். அதனால் செக் வந்து சேர Payment Issued தேதியிலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம். பொறுமையாக காத்திருங்கள்.

இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?


·         உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
            விடை கிரண்ட்டப்

·         இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
விடை:  4

·         பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்

·         இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21

·         மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி


·         உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1

·         அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்

·         உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
விடை: ஜூன் 5

·         பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விடை: விஷ்ணு சர்மா

·         ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
விடை: நாக்கு

புளுடூத் - பெயர் காரணம் (Name reason for Bouetooth) :


புளுடூத் - பெயர் காரணம் (Name reason for Bouetooth) :
இன்று பலர் Bluetooth உபயோகிக்கிறோம்  Bluetooth தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் Denmark, Sweeden, Norway மற்றும் Finland நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற Denmark அரசர் ஹெரால்ட் புளுடூத் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.

இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், Norway நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.

காதல் கவிதைகள்


நீ
உன் முகச்சுளிபாலும்
சிறு முறைப்பாலும்
உன் கோபத்தை வெளிப்படுத்துகிறாய்
ஆதுவோ,
உன் அழகை வெளிபடுத்துகிறது
ஆம்
அன்பே - நீ
கொஞ்சும் போது
ரொம்ப ஆழகு
கோவப்பட்டால்
இன்னும் ஆழகு!

கவிதை பூங்கா

புகைப்படம் 


இறந்த காலத்தின்
உயிரோட்டமுள்ள
நிகழ்வுகளை
நிகழ் காலத்தில்
நிஜமாய் காட்டும்
நிழல்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More